திங்கள், 7 நவம்பர், 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்குகிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த ஆண்டு ஹஜ் செய்த அனைத்து மக்களின் ஹஜ்
ஏற்று கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும், ஹஜ் பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திடவும் துவா செய்து கொள்யோம்.

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

ஸ்ரீவை,எம்எல்ஏயின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்தும் பறிக்கப்பட்டது


தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் உட்பட ஆறு பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சண்முகநாதன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த சண்முகநாதனுக்கு இந்த முறை ஜெ. இந்து அறநிலையத்துறை அமைச்சராக வாய்ப்பளித்தார்.

இதன் மூலம் ஸ்ரீவைகுண்டத்துக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கிடைத்தது.ஆனால் அது 5 மாதத்தில் பறிக்கப்பட்டது.இதை போல் 2001 ஆண்டும் ஸ்ரீவைக்கு விஐபி தொகுதி அந்தஸ்து கொடுத்து 9 மாதத்திலேயே பின் பறிக்கப்பட்டது


கடந்த 2001ம் ஆண்டிலும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகநாதன். அப்போது அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் 9 மாதத்திலேயே சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 2006 – ம் ஆண்டுவரை எம்எல்ஏவாகவே பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

வியாழன், 3 நவம்பர், 2011

ஸ்ரீவை., எல்லைக்குட்பட்ட பகுதியில் பன்றி, நாய்களை ஒழிக்க பஞ்., கூட்டத்தில் விவாதம்

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ், எல்லைக்குள் பன்றிகள், நாய்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என பஞ்., கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்., உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு டவுன் பஞ்.,தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.

துணைத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது

பிச்சை: ஸ்ரீவைகுண்டம் மின் சந்தை வளாகத்தில் அதிகமாக மழைநீர் தேங்குவதால் அந்தபகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து பஞ்.,நிர்வாகம் உடனடியாக தீர்வு காணப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் டவுன்பஞ்.,சிற்கு புதிய டிராக்டர் ஒன்று தேவை. தற்போது உள்ள டிராக்டர் சரிவர இயங்கவில்லை. அதனை வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

பெருமாள்: டிராக்டர் வாங்கும் போது அதோடு சேர்த்து மண் அள்ளும் இயந்திரமும் வாங்கவேண்டும்.

தலைவர்: தற்போது உள்ள டிராக்டர் சரி இல்லை எனில் கண்டிப்பாக மக்கள் சேவைக்கு புதிய டிராக்டர் வாங்க ஆவன செய்யப்படும்.

பொன்பாண்டி: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ரதவீதிகளில் திருவிழா காலங்களில் ஆடு வெட்டுவதை தடை செய்யவேண்டும்

தலைவர்: அதனை நகர சுகாதாரம் கருதி சந்தை வளாகத்தில் மாற்ற உடனடியாக அறிவிப்பு வெளியிடப்படும்

பெரியார் செல்வம்: நகர பகுதிக்குள் நாய், பன்றிகள் தொல்லை அதிகமானதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

தலைவர்: ஓரு மாதத்திற்குள் கால அவகாசம் கொடுத்து அதனை முற்றிலுமாக ஒழித்து சுத்தமான ஸ்ரீவை.,யை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

பால்ராஜ்: குடிநீர், சுகாதாரம் போன்ற பெரிய பிரச்னைகள் இருக்கும்போது பிறர் வார்டுகளில் பிரச்னையை பற்றி உறுப்பினர்கள் பேசலாமா?

தலைவர்: நாம் 18 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் ஸ்ரீவைகுண்டத்தை வளம்பெற செய்யமுடியும். நான் உட்பட யாரும் எந்தவிதமான கமிஷன் ஏதும் வாங்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார்.

எழுத்தர் தாமரை செல்வன் நன்றி கூறினார்.

செய்தி : தினமலர்

புதன், 2 நவம்பர், 2011

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தெரியாத அளவுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சித் தலைவராக பதவி ஏற்றிருக்கும் பி.அருணாசலம் தலைமையில் அமலைச்செடிகளை அகற்றும் பணி தொடங்கியது.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் பி.அருணாசலம் கூறியதாவது:

அணைக்கட்டுப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளால் தண்ணீர் அசுத்தமடைந்துள்ளது.எனவே இந்த மழைக்காலத்தில் அமலைச் செடிகளை பொதுமக்கள் துணையுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்

செய்தி : தினமணி

ஸ்ரீவைகுண்டத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை

ஸ்ரீவைகுண்டத்தில் பள்ளமான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு மற்றும் காலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருத்துவர் காலனி, கணியான் காலனி, கருணாநிதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டில் இருந்து வெளியில் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து தலைவர் ஆயில் மோட்டார்களை கொண்டுவந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

மழைக்காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் பள்ளமான பகுதிகளில் மண் அடித்து மேடாக்கவும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாக உள்ள பகுதிகளை மேடாக்கி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், மழைக்காலமாக இருப்பதால் தெருக்களில் எரியாமல் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர பஞ்சாயத்து தலைவர் பி.அருணாசலம் கூறினார்

தகவல் : தூத்துக்குடி இணைதளம்

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றித் தேர்வு

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அ.முத்துலட்சுமி, துணைத் தலைவராக சு.வசந்தா ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தம் உள்ள 14 வார்டு உறுப்பினர்களில், அதிமுக சார்பில் 10 பேரும், திமுக சார்பில் ஒருவரும், தேமுதிக சார்பில் ஒருவரும், சுயேச்சைகள் 2 பேரும் வெற்றிபெற்றனர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவர் தேர்தல், தேர்தல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 13-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.முத்துலட்சுமி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் 9-வது வார்டு உறுப்பினர் சு. வசந்தாவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றியச் செயலர் வெ.ஆறுமுகநயினார், பெருங்குளம் நகரச் செயலர் செல்லத்துரை, திருப்பாற்கடல், ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக சார்பில் போட்டியிட்ட மு. மாரிமுத்து வெற்றிபெற்றார்

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி துணை தலைவர் தேர்தல் கூட்ட அரங்கில் தேர்தல் அலுவலர் மணி முன்னிலையில் நடந்தது. மொத்தம் 18 வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணை தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் மு.மாரிமுத்து மற்றும் தி.மு.க. சார்பில் பெ.தங்கவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாரிமுத்து 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெ.தங்கவேல் தோல்வியடைந்தார்.

வெற்றி பெற்ற மு.மாரிமுத்துவுக்கு பேரூராட்சித் தலைவர் பி. அருணாசலம், நகர அதிமுக செயலர் பால்துரை, ஒன்றிய மாணவரணி இணைச் செயலர் சிவராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

LinkWithin

Blog Widget by LinkWithin